காந்த பார்வை கொண்டவளா நீ
சாந்த பார்வை கொண்டவளா நீ
முத்து முத்து பல் அழகியா நீ
நெஞ்சை அள்ளும் சொல் அழகியா நீ
புன்னகையின் அரசியா நீ
நல்நகையின் இளவரசியா நீ
நாணத்தில் மலரும் பூங்கொத்தா நீ
வெட்கத்தில் சிவக்கும் பூச்செண்டா நீ
பளிங்கு மேனி கொண்டவளா நீ
பரதம் ஆடும் மயிலா நீ
பச்சை கிளியின் வண்ணமா நீ
இச்சை ஊட்டும் குயிலா நீ!!!!!
No comments:
Post a Comment