Friday 25 May 2012

வேண்டாம் மழலையே



பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட 
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு 
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள் 
செல்லங்களே!!!

No comments:

Post a Comment