Friday 20 July 2012

மழை பாடல்



மானங்கருக்குதே வண்ண மயிலும் ஆடுதே
வறண்ட காட்டிலே ஆறும், குளமும் சிரிக்குதே
ஜனங்க பார்த்து ரசிக்குதே!!!
உழவன் மனசுல அறுவடை காலம் வந்ததே
மண் வாசம் வீசுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !!
இடியின் சத்தம் கேட்டு பிள்ளை மிரளுதே !!
அதையும் இசை என்று ஆக்கி நம்ம ஜனங்க பாடுதே!!

மின்னி மின்னி சின்ன இடியோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத்தோட
வானவில் தான் வரைஞ்சு இருக்கு
மனசுக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
கிள்ளி கிள்ளி தரும் உறவல்ல
அன்னை தானே இந்த வானம் போல
யாருக்கு தான் மனசு இருக்கு
மண்மணம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து வறட்சியில போச்சு நிலத்துக்கும் ஈரம் இல்லை
மழைதுளி வழி துணைக்கு வந்தா வறட்சியே இல்லை
விவசாயத்தில் ஏதும் தனிச்சு இல்லை
மண்ணின் வாசம் மழையின் சாரலும் சேர்ந்தது போல ....


ஓ!! ஆத்துல என்ன அயிரை மீன்
தினம் தினம் நாக்கு ருசி தேடும்
நகரத்துல யாரு அறிஞ்சா
சுவைகளை தான் யாரு புரிஞ்சா
விதை விதைக்குற கைதானே
உன்னை கேட்குது தினம் தோறும்
உன்னை வரவேற்க சிட்டு குருவியும்
புல்லும், மலரும் தயார் ஆச்சு
மழை சேற்றில் பரதம் ஆடும் உயிர் எல்லாம்
ஏறு பூட்டி உயிர் வளர்க்கும் உழவு எல்லாம்
மழைத்தூறல் படும்முன்னே
மழையின் மடியை தேடி ஓடும் குழந்தை போல....

பின் குறிப்பு : இது ஒரு பாடலின் இசையை தழுவி எழுதிய வரிகள். சில இடங்களில் தாளம், ராகம், சுதி சேரலைனா திட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன முயற்சி. பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், முக்கியமா நம்ம தோட்டத்து மக்கள் எல்லாம் மன்னிசுருங்கோ. கடைசி வரை என்ன பாட்டுனு சொல்லலைனு பாக்குறீங்களா. சரி சொல்லுறேன்.

பாடல் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
படம் : பிதாமகன்

No comments:

Post a Comment